இப்தார் விருந்து அளித்த 80 வயது பிராமண பெண்.. மதத்தை வென்ற மனிதநேயம்!

Bengaluru: பெங்களூருவில் 80 வயது இந்து மூதாட்டி ஒருவர், சமூகப் பிளவுகளை குறைக்கும் நோக்கில் இஃப்தார் விருந்தை நடத்தியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தில் ஏற்பட்ட சமுதாய பதற்றம் காரணமாகவே இந்த யோசனை தோன்றியதாக மீனாட்சி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Published on: March 15, 2026 at 11:48 am

Updated on: March 15, 2026 at 11:54 am

பெங்களூரு மார்ச் 15 2026;80 வயதான மீனாட்சி ஸ்ரீனிவாசன், உணவின் மூலம் அமைதியான ஆனால் வலுவான ஒற்றுமை முயற்சியை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து நான்காவது ஆண்டாக, இந்து பிராமணர் ஆன இவர், இப்தார் விருந்தை நடத்தி வருகிறார்; மேலும், ரமலான் நோன்பு திறக்கும் நேரத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைக்கிறார்.

தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தில் ஏற்பட்ட சமுதாய பதற்றம் காரணமாகவே இந்த யோசனை தோன்றியதாக மீனாட்சி கூறினார். “மக்கள் ஏன் இப்படிப் போராட வேண்டும் என்று எப்போதும் யோசித்தோம். மேலும் கோபத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் ஆதரவு அளிக்க வேண்டும் என்று உணர்ந்தோம்,” என அவர் தெரிவித்தார். இஃப்தார் நிகழ்ச்சி சனிக்கிழமை அஷீர்வாத் மைய வளாகத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க; 92,700 மெட்ரிக் டன் எல்.பி.ஜி.. இந்தியா புறப்பட்ட சிவாலிக், நந்தா தேவி கப்பல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com