Drone strike: அமேசான் டேட்டா சென்டர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் நடந்த தாக்குதல்கள், அரசின் நடவடிக்கைகள் காரணமான விமான சேவையும் பாதிப்பை சந்தித்துள்ளது.
Drone strike: அமேசான் டேட்டா சென்டர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் நடந்த தாக்குதல்கள், அரசின் நடவடிக்கைகள் காரணமான விமான சேவையும் பாதிப்பை சந்தித்துள்ளது.

Published on: March 5, 2026 at 1:38 pm
துபாய், மார்ச் 5, 2026: அமெரிக்கா- ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல் தொடங்கியதிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை ஐக்கிய அரபு அமீரகம் (யூ.ஏ.இ) தடுத்து நிறுத்தியுள்ளது. இதற்கிடையில், துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் திட்டமிட்ட பெரும்பாலான விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும், அவசர மற்றும் மீளப்பிரயாண சேவைகளுக்காக, மணிக்கு 48 விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஏர் இந்தியா, ஜெத்தா–இந்தியா விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரக (UAE) அரசு, பயணிகளுக்கான விசா அபராதங்களை ரத்து செய்துள்ளது. இந்த நிலையில், கத்தார், தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புகளை வெளியேற்றியுள்ளது. மேலும், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளில் உள்ள அமேசான் டேட்டா சென்டர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: மெசேஜை மறைத்து அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com