Nanguneri double murder case: நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்; நாங்குநேரி பகுதியில் நடந்த இரட்டை கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Nanguneri double murder case: நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்; நாங்குநேரி பகுதியில் நடந்த இரட்டை கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: March 4, 2026 at 9:51 am
திருநெல்வேலி மார்ச் 4 2026; திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள பெரும்பத்து என்ற கிராமத்தில் டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த பலரை அங்கு வந்த மர்ம கும்பல் அறிவாளால் தாக்கி கொடூரமான வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது.
இந்த கொடூரமான வன்முறை சம்பவத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் மூன்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அதில் ஒருவர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை ஐந்து பேரை கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் மற்றும் கல்யாணி என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரில், இருவர் நாங்குநேரி சின்ன துரை யை 2023ல் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : போதை கும்பலின் அட்டூழியத்தை தடுக்க திராணியற்ற அறிவாலயம் அரசு… எல். முருகன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com