இஸ்லாமாபாத், ஜன.31, 2026: உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் உலகக் கோப்பை பங்கேற்பு இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் T20 உலகக் கோப்பை பயணம் தொடர்பான செய்திக் குறிப்பு முதலில் வெளியிடப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டு, சில மாற்றங்களுடன் மீண்டும் வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக வெளியான அறிக்கைகளின்படி, பாகிஸ்தான் அணி பிப்ரவரி 2 அன்று இலங்கைக்கு பயணம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லாததால், அணியின் பங்கேற்பு குறித்து குழப்பம் நீடிக்கிறது.
இது குறித்து ரெவ்ஸ்போர்ட் வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தான் அணியின் T20 உலகக் கோப்பை பங்கேற்பு குறித்து தெளிவான, அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லாததால் குழப்பம் நீடிக்கிறது. சாதாரணமாக, அணியின் பயண ஏற்பாடுகள் உறுதியான பங்கேற்பைச் சுட்டிக்காட்டும். ஆனால் இப்போது அந்தத் தெளிவின்மை, பாகிஸ்தான் அணியின் இறுதி நிலைப்பாட்டைச் சுற்றி ஆர்வத்தையும் சந்தேகத்தையும் தூண்டுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தொடர் குழப்பம் ஒரு அரசியல் நிலைப்பாட்டைப் போலத் தோன்றுகிறது. இது கிரிக்கெட்டையே ஆழமான குழப்பத்திற்குள் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, போட்டி பிப்ரவரி 7 அன்று இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள நிலையில், இந்தத் தெளிவின்மை உலகக் கோப்பையின் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்குகிறது.
உலகக் கோப்பை போட்டிகள் இன்னமும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில்,, பாகிஸ்தான் அணியின் பங்கேற்பு குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லாததால் குழப்பம் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவை ஒலிம்பிக் அழைத்துச் சென்ற ஹாக்கி பயிற்சியாளர் நாப்ஸ் மரணம்.. யார் இவர்? முழு விவரம்!
Women’s Nations Hockey Cup: இந்திய மகளிர் ஹாக்கி அணி, நியூசிலாந்து ஆக்லாந்தில் நடைபெற்ற FIH ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கப் போட்டியில் ஜப்பானை 2-1 என்ற…
Shruti Haasan : வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது ஒரு பாடம் கிடைக்கிறது என்றும், கடினமான நாட்கள்கூட நமக்கு முக்கியமான அனுபவங்களை கற்றுத்தரும் நல்ல நாட்கள்தான் என்றும்…
SP’s Surprise Raid in Chengalpattu : செங்கல்பட்டில் மாவட்ட எஸ்பி ஐமன் ஜமால் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்….
IAS Aishwarya Ramanathan : நாகர்கோவில் மாநகராட்சி புதிய ஆணையராக ஐஸ்வர்யா ராமநாதன் IAS நியமிக்கப்பட்டுள்ளார்….
TN Debt Hits ₹13.18 Lakh Crore : தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில், கடன் சுமையை எவ்வாறு சமாளிப்பது என்பது…
Tamil News Updates June 17 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்