DMK MP Dayanidhi Maran: வட இந்தியாவில் பெண்கள் வீட்டு வேலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
DMK MP Dayanidhi Maran: வட இந்தியாவில் பெண்கள் வீட்டு வேலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

Published on: January 14, 2026 at 6:46 pm
சென்னை, ஜன.14, 2026: தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், செவ்வாய்க்கிழமை, குவைத்-இ-மில்லத் மகளிர் அரசு கல்லூரியில் மாணவிகளிடம் உரையாற்றியபோது, வடஇந்திய மாநிலங்களில் பெண்களின் நிலையை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு கூறிய கருத்துகள் அரசியல் மற்றும் சமூக விவாதத்தை தூண்டியுள்ளன.
இந்த விழாவில் பேசிய தயாநிதி மாறன், “வடஇந்திய மாநிலங்களில், பெண்கள் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளைத் தொடரத் தடுக்கப்படுவதாகவும், வீட்டில் இருந்து வீட்டு வேலை செய்வதற்கே ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து, “நமது மாணவிகள் பெருமைப்பட வேண்டும். வடஇந்திய மாநிலங்களில், பெண் குழந்தைகளை வேலைக்குச் செல்ல வேண்டாம், வீட்டில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கே, நாங்கள் பெண்களைப் படிக்கச் செய்கிறோம்,” என்றார்.
திராவிட மாடல் ஆட்சி
தொடர்ந்து, “தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, திராவிட இயக்கத்தின் சமூக நீதி மற்றும் பெண்கள் கல்வி கொள்கையைத் தொடர்ந்து செயல்படுத்துவதாகவும், தமிழ்நாடு “இந்தியாவின் சிறந்த மாநிலம்” எனவும் அவர் புகழ்ந்தார்.
மேலும், சமூக சீர்திருத்தவாதி பெரியார் குறித்து குறிப்பிட்ட அவர், திராவிட சிந்தனை பெண்கள் கல்விக்கான அடித்தளத்தை அமைத்ததாகவும், தற்போதைய அரசு அதையே பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சி, “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகளுக்கு 900 லேப்டாப்களை வழங்கினார்.
அப்போது உரையாற்றிய அவர், “பெண்கள் கல்வியை முடித்தவுடன், அவர்கள் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு செய்கிறார்கள். நாங்கள் நமது மாணவிகளால் பெருமைப்படுகிறோம்,” என்றார்.
மேலும், 1974-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கல்லூரிக்கு பெயரிட்டதும், அதன் கட்டமைப்பை வலுப்படுத்தியதும் நினைவுகூர்ந்தார்.
இதையும் படிங்க: திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. மூவர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com