பா.ம.க அன்புமணிக்கு சொந்தமானது அல்ல.. ஜி.கே. மணி

G K Mani: பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கு சொந்தமானது அல்ல என அக்கட்சியின் ராமதாஸ் தரப்பு கௌரவத் தலைவர் ஜி.கே மணி கூறியுள்ளார்.

Published on: December 29, 2025 at 7:45 pm

சென்னை, டிச.29, 2025: பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் தரப்பு இன்று (திங்கள்கிழமை) கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ் தரப்பு கௌரவத் தலைவர் ஜி.கே மணி, “பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கு மட்டும் சொந்தம் அல்ல” என்றார். அன்புமணி செய்தது துரோகம்.. துரோகம்.. அவரது துரோகம் இனி ஒருபோதும் எடுபடாது. அவர் அரசியலை ஓரங்கட்டிவிட்டு வேறு வேலை பார்க்கட்டும்” என்றார்.

ஆர்.எஸ்.எஸ் அடிமைகள்- ஸ்ரீகாந்தி

இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி அன்புமணி ராமதாஸ் தரப்பை ஆர்.எஸ்.எஸ் அடிமைகள் என விமர்சித்தார். அப்போது, “எங்கள் கௌரவத் தலைவரை பார்த்து தி.மு.க.வின் அடிமை என்கிறார்கள். இதனை சொல்பவர்கள் யாரென்று பார்த்தால், அத்தனையும் ஆர்.எஸ்.எஸ் அடிமைகள்” என்றார்.

சௌமியா அண்புமணி நீக்கம்

முன்னதக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து சௌமியா அண்புமணி நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஸ்ரீகாந்தி அந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : வடிவேல், நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும்.. போட்டுத்தாக்கிய செல்லூர் ராஜூ!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com