Statues of leaders unveiled in UP: இந்தியாவின் அடையாளம் வாஜ்பாய் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
Statues of leaders unveiled in UP: இந்தியாவின் அடையாளம் வாஜ்பாய் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

Published on: December 26, 2025 at 12:02 am
லக்னோ, டிச.25, 2025; காங்கிரஸின், காந்தி குடும்பத்தினரை மறைமுகமாகத் தாக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (டிச.25, 2025) பேசுகையில், “இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரே ஒரு குடும்பத்திற்கு மட்டும் பெருமை சேர்ப்பதிலிருந்து தனது கட்சி முன்னேறி, மற்ற தலைவர்களையும் அங்கீகரிக்கிறது” என்றார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்த நிகழ்ச்சியில் இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மேலும், “காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மூத்த பாஜக தலைவர்கள் அவமதிக்கப்பட்டனர்” என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸுடன் பாஜக-வை ஒப்பிட்டுப் பேசிய அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் முதல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் வரை அனைவருக்கும் உரிய அங்கீகாரத்தை அளித்து, அவர்களைக் கட்சி மதிக்கிறது என்றும் கௌரவிக்கிறது என்றார்.
தொடர்ந்து, “”பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி மற்றும் பாரத ரத்னா மகாமனா மதன் மோகன் மாளவியா ஜி – இந்த இரண்டு பெரிய மனிதர்களும் இந்தியாவின் அடையாளம், ஒற்றுமை மற்றும் பெருமையைப் பாதுகாத்தனர், மேலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அழியாத முத்திரையை பதித்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க : ராகுல் இன்னமும் குழந்தையாக இருக்கிறார்.. புயலை கிளப்பிய ஜெர்மன் பயணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com