இந்தியா-ஜோர்டான் 75 ஆண்டுகால நட்பு.. மன்னருடன் பிரதமர் சந்திப்பு

Narendra Modi: இந்தியா-ஜோர்டான் 75 ஆண்டுகால தூதரக உறவை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் மன்னரை சந்தித்து உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி.

Published on: December 16, 2025 at 12:25 pm

அம்மான், டிச.16, 2025: இந்தியா மற்றும் ஜோர்டான் நாடுகள் தங்களின் தூதரக உறவுகளின் 75ஆம் ஆண்டை கொண்டாடுகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னர் அப்துல்லா II உடன் கலந்துரையாடினார். அப்போது, தனது கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார்.

இந்தச் சந்திப்பு, நம்பிக்கை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அடிப்படையில் உருவான கூட்டாண்மையை பிரதிபலித்தது. அப்போது, இரு நாடுகளும் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக வலுவான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தின.

அதேசமயம், வர்த்தகம், உரங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது. தொடர்ந்து, எதிர்கால நோக்குடன் கூடிய இருதரப்பு கூட்டாண்மையை உருவாக்க இரு நாடுகளும் முனைந்தன.

இதையும் படிங்க : டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம்.. விமானங்கள், ரயில்கள் தாமதம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com