இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அடுத்த ஜாக்கெட்.. ரூ.51கோடி ரெடி.. பி.சி.சி.ஐ கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Indian women’s cricket team: உலக கோப்பையை வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ரூ.51 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

Published on: November 4, 2025 at 1:31 pm

புதுடெல்லி, நவ.4, 2025: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள், பணியாளர்கள் மற்றும் தேர்வு குழுவுக்காக ₹51 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது. இது, வரலாற்றில் முதன்முறையாக ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற சிறப்பான சாதனையை கொண்டாடும் வகையில் வழங்கப்படுகிறது.

பி.சி.சி.ஐ வெளியிட்ட அறிக்கையில், ஆதரவு குழுவும் மற்ற அனைத்து பங்குதாரர்களும் மிகப்பெரிய மேடையில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுகளை நனவாக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையைப் பற்றி பி.சி.சி.ஐ தலைவர் மிதுன் மனாஸ், “அணியின் மனோத்தன்மை, திறமை மற்றும் ஒற்றுமை நம் நாட்டின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.

இந்த வெற்றி, உலகத் தரமான மகளிர் திட்டத்தை உருவாக்க பி.சி.சி.ஐ எடுத்த முதலீடு மற்றும் நம்பிக்கையை நியாயப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (நவ.2, 2025) ஹார்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, நவி மும்பையில் நடைபெற்ற ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்தியா 299 ரன்கள் இலக்கை நிர்ணயித்து, தென்னாப்பிரிக்காவை 45.3 ஓவர்களில் 246 ரன்களில் கட்டுப்படுத்தியது. இந்தப் போட்டியில் ஷபாலி வர்மா, 87 ரன்கள் அடித்து, 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக “போட்டியின் சிறந்த வீராங்கனை” விருதைப் பெற்றார். மேலும், தீப்தி சர்மா, தனது ஆல்-ரவுண்ட் செயல்திறனுக்காக “தொடரின் சிறந்த வீராங்கனை” விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலக கோப்பை மகளிர் கிரிக்கெட்.. இந்திய அணி பெற்ற பரிசுத் தொகை எத்தனை கோடிகள் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com