புதுச்சேரி, அக்.3, 2025: “நாட்டின் அமைதியை கெடுக்கும் ஓர் இயக்கம்” ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கத்தை என கடுமையாக விமர்சித்துள்ளார் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நாராயண சாமி.
நாராயண சாமி பேட்டி
இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்ஸின் 100வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றி இருவருக்கும் என்ன தெரியும்?” எனக் கேள்வியெழுப்பினார்.
ஆங்கிலேயர்களை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ்
தொடர்ந்து, “சுதந்திரப் போராட்டத்தின் போது, மகாத்மா காந்தி மற்றும் நேரு தலைமையிலான போராட்டங்களின் போது, ஆர்.எஸ்.எஸ் தான் ஆங்கிலேயர்களை ஆதரித்தது” என்றார்.
ஆர்.எஸ்.எஸ் மீது விமர்சனம்
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் குறித்து விமர்சித்து பேசிய நாராயண சாமி, “ஆர்.எஸ்.எஸ் நாட்டின் அமைதியைக் குலைக்கும் ஒரு இயக்கம்; அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லை” என்றார்.
தொடர்ந்து, “முதல்வர் மற்றும் முதன்மை அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்னணியை அறியாமல் அவர்களை வாழ்த்துகிறார்கள்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : அஸ்ஸாமை உலுக்கும் பாடகர் ஜூபின் கார்க் மரணம்.. நீதி கோரி காங்கிரஸ் பேரணி
Forest Fires in Rajouri : ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்ட காட்டில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது….
Flight suspension to Israel : ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கான தனது விமான சேவைகள் இடைநிறுத்தத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது….
New Karnataka CM : கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே சிவக்குமார் தேர்வாகியுள்ளார் என அமைச்சர் ஹெச்.கே பாட்டீல் கூறினார்….
Delhi Heat Wave: டெல்லியில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….
Siddaramaiah set to resign : கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா இன்று (மே 28, 2026) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்ற தவவல்கள் வெளியாகியுள்ளன….
Cocaine Haul at Mundra Port : குஜராத்தில் ரூ.1,150 கோடி மதிப்பிலான கோகெய்ன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்