நவராத்திரி, தீபாவளி ஸ்பெஷல் ரயில்.. தென்னக ரயில்வே அறிவிப்பு

Southern Railway: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

Published on: September 21, 2025 at 10:31 pm

Updated on: September 21, 2025 at 10:33 pm

புதுடெல்லி, செப் 21, 2025: நவராத்திரி, தீபாவளி, மற்றும் சத் பூஜை உள்ளிட்ட தொடர் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தென்னக ரயில்வே சில சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது.

சிறப்பு ரயில்கள் குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

  • போத்தனூர் – பராவுனி வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06055)
    இந்த ரயில் செப்டம்பர் 6 முதல் நவம்பர் 29 வரை சனிக்கிழமை தோறும் இயக்கப்படும். சனிக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 11:50 மணிக்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் பிற்பகல் 2:30 மணிக்கு பராவுனி சென்றடையும். மொத்தம் 13 சேவைகள் இயக்கப்படும்.
    இந்த ரயிலின் பெட்டிகளில் ஒரு ஏசி டூ-டயர், மூன்று ஏசி த்ரீ-டயர், 17 ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் அடங்கும்.
    இது ஈரோடு, சேலம், காட்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
  • பராவுனி – போத்தனூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06056)
    மறுமார்க்கமாக,செவ்வாய்க் கிழமைகளில் இரவு 11:45 மணிக்கு பராவுனியில் இருந்து புறப்பட்டு, மூன்றாவது நாள் அதிகாலை 3:45 மணிக்கு போத்தனூர் வந்தடையும். செப்டம்பர் 9 முதல் டிசம்பர் 2 வரை இந்த ரயில் 13 சேவைகள் இயக்கப்படும்.
  • கோயம்புத்தூர் – தன்வாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06063)
    செப்டம்பர் 5 முதல் வெள்ளிக்கிழமைகளில் இந்த ரயில் கோயம்புத்தூரில் இருந்து காலை 11:50 மணிக்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை 8:30 மணிக்கு தன்வாத் சென்றடையும்.
    நவம்பர் 28ஆம் தேதி வரை என வெள்ளிக்கிழமை தோறும் மொத்தம் 13 சேவைகள் இயக்கப்படும். இந்த ரயிலின் பெட்டிகளில் ஒரு ஏசி டூ-டயர், இரண்டு ஏசி த்ரீ-டயர், 15 ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் அடங்கும்.
  • தன்வாத் – கோயம்புத்தூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06064)
    மறுமார்க்கமாக, செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 1 வரை திங்கள்கிழமைகளில் காலை 6:00 மணிக்கு தன்வாதில் இருந்து புறப்பட்டு, மூன்றாவது நாள் அதிகாலை 3:45 மணிக்கு கோயம்புத்தூர் வந்தடையும்.
    இந்த ரயிலிலும் 13 சேவைகள் இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு உடனடியாகத் தொடங்குகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்.. கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை.. அஸ்வினி வைஸ்ணவ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com