வங்கதேச மாணவர்கள் 5 பேர் சஸ்பெண்ட்.. பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!

NIT Silchar: பல்கலைக்கழக வளாகத்தில் சண்டையிட்ட வங்கதேசத்தை சேர்ந்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Published on: September 15, 2025 at 3:18 pm

Updated on: September 15, 2025 at 3:19 pm

கௌகாத்தி, செப்.15, 2025: சில்சார் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) பயிலும் 5 வங்கதேச மாணவர்கள், வளாகத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த மூத்த மாணவர்களுடன் சண்டையில் ஈடுபட்டனர். இதற்காக இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், விசாரணையில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சட்டவிரோத போதைப்பொருள்களை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவில் நடந்துள்ளதாக என்.ஐ.டி. சில்சார் இயக்குநர் பேராசிரியர் திலீப் குமார் பைத்யா உறுதிப்படுத்தினார். மேலும், கல்வி நிறுவனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணையில் மாணவர்கள் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது என்பதையும் அவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக, பல்கலைக்கழக குழு 5 மாணவர்களையும் ஜூலை முதல் டிசம்பர் வரை மற்றும் ஜனவரி முதல் ஜூன் வரை இரண்டு செமஸ்டர்களுக்கு வகுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் பேராசிரியர் பைத்யா தெரிவித்தார். பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் எஸ்.கே ஷாஹ்ரியர் அகமது ஆகாஷ், ஷிமந்தோர் கோஷ், சௌம்யஜித் பால், சஸ்ஸாத் ஹொசைன் ரஃபி மற்றும் முகமது நூர் ஹொசைன் ஆவார்கள்.

இதையும் படிங்க : 2023 நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்ற அனுஷ்கா குல்கர்னி; சாதித்தது எப்படி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com