Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Published on: September 11, 2025 at 10:07 pm
Updated on: September 11, 2025 at 10:09 pm
ராய்ப்பூர், செப்.11, 2025: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் முக்கிய தலைவர் உள்பட 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம், கரியாபந்த் மாவட்டத்தில் நடந்த நடவடிக்கையில், மூத்த தலைவர் உட்பட 10 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் மோடம் பால்கிருஷ்ணா என்றும் அழைக்கப்படும் சிசி உறுப்பினர் மனோஜும் ஒருவர். அவரது தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.
மெயின்பூர் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், இ-30 (E-30), எஸ்.டி.எஃப் (STF) மற்றும் கோப்ரா (COBRA) ஆகியவற்றின் கூட்டுக் குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன.
இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிவாஜிநகர் மெட்ரோ டூ புனித மேரி.. பெங்களூருவில் சர்ச்சை.. பா.ஜ.க கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com