Siddaramaiah: பெங்களூரு சிவாஜி மெட்ரோ ரயில் நிலைய பெயரை புனித மேரி ரயில் நிலையம் என மாற்றுவேன் என கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா கூறியுள்ளார். இது சர்ச்சையாக வெடித்துள்ளது.
Siddaramaiah: பெங்களூரு சிவாஜி மெட்ரோ ரயில் நிலைய பெயரை புனித மேரி ரயில் நிலையம் என மாற்றுவேன் என கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா கூறியுள்ளார். இது சர்ச்சையாக வெடித்துள்ளது.
Published on: September 11, 2025 at 8:22 pm
பெங்களூரு, செப்.11 2025: கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா சமீபத்தில் சிவாஜிநகர் செயிண்ட் மேரி பசிலிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “வரவிருக்கும் மெட்ரோ நிலையத்திற்கு செயிண்ட் மேரியின் பெயரை வைக்க வேண்டும் என்று அவர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளேன்” என்றார்.
சித்த ராமையாவின் இந்தப் பேச்சுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “சிவாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரை மாற்றுவேன் என்ற சித்த ராமையாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சத்ரபதி சிவாஜியை அவமதித்துள்ளார்” என்றார்.
மேலும் மராத்தி மன்னனை காங்கிரஸ் கடந்த காலத்தில் இருந்தே அவமதித்து வருகிறது. நேரு எழுதிய நூலான டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகத்திலும் மன்னர் சிவாஜி அவமதிக்கப்பட்டிருந்தார்” என்றார். மேலும், சித்த ராமையாவுக்கு கடவுள்தான் அறிவை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாரணாசியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் மொரிஷீயஸ் பிரதமர்.. முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com