Delhi man held for raping mother: டெல்லியின் ஹவுஸ் காசி பகுதியில் தாயை பாலியல் வன்கொடுமை செய்த 39 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Delhi man held for raping mother: டெல்லியின் ஹவுஸ் காசி பகுதியில் தாயை பாலியல் வன்கொடுமை செய்த 39 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Published on: August 17, 2025 at 11:34 am
டெல்லி, ஆக.17 2025: மத்திய டெல்லியின் ஹவுஸ் காசி பகுதியில் தனது 65 வயது தாயை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக 39 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட பெண் தனது மகன் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பதாக சந்தேகித்து இவ்வாறு மகன் நடந்துக்கொண்டதாக கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினர் ஒரு மத யாத்திரைக்கு சென்றுள்ளனர். அதன் பின்னர், இந்தத் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து புகார் அளிக்க, அந்த வயதான பெண் தனது 25 வயது மகளுடன் வெள்ளிக்கிழமை ஹவுஸ் காசி காவல் நிலையத்தை அணுகினார்.
புகாரில் இருப்பது என்ன?
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில், ”பாதிக்கப்பட்ட பெண் தனது ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கணவர், குற்றம் சாட்டப்பட்ட மகன் மற்றும் அவர்களது மகள்களில் ஒருவருடன் ஹவுஸ் காசி பகுதியில் வசித்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குடும்பத்தில் மூத்த மகள் ஒருவர் உள்ளார். அவர் திருமணமாகி அதே பகுதியில் தனது மாமியார் மற்றும் அவரது உறவினர்களுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜூலை 17 அன்று, அந்தப் பெண், அவரது கணவர் மற்றும் இளைய மகள் புனித யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் டெல்லி திரும்பியுள்ளனர். அதன் பின்னர், தனது தாயை மகன் வன்கொடுமை செய்துள்ளார். இளவயதில் தனது தாயார் வேறு ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறி இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பான புகாரில், புர்காவை கழற்றச் சொல்லி அவர் பாலியல் வன்கொடுமையில் இரு முறை ஈடுபட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் சீக்கிய குடும்பம் மீது தாக்குதல்? போலீஸ் மீது குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com