Pahalgam Terror attack: தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் சுற்றுலா விசாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
Pahalgam Terror attack: தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் சுற்றுலா விசாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
Published on: April 24, 2025 at 4:25 pm
சென்னை, ஏப்.24 2025: தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் உள்ளூரை சேர்ந்த ஒரு குதிரை ஓட்டி இஸ்லாமியர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், பலர் காயமுற்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக மருத்துவம் மற்றும் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுத்து அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.
தற்போது இதற்கான பட்டியலை தயாரிக்கும் பணிகள் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. பொதுவாக பாகிஸ்தானில் இருந்து சென்னை மற்றும் வேலூருக்கு மருத்துவ சிகிச்சைக்கு பாகிஸ்தானியர்கள் வருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Pahalgam terror attack: திடீரென கேட்ட துப்பாக்கி சப்தம், விழுந்த உடல்கள்; இந்து பேராசிரியர் தப்பியது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com