சஹாபுதீன் ரஸ்வி அவதூறு கருத்தை திரும்ப பெறுக; முனிருத்தீன் ஷெரீப்

Muniruddin Sharif: தமிழக இஸ்லாமியர்கள் குறித்து சஹாபுதீன் ரஸ்வி அவதூறு கருத்தை திரும்ப பெறுக என இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

Published on: April 17, 2025 at 6:24 pm

சென்னை, ஏப்.17 2025: இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலின் போது பாஜகவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்தவர் சஹாபுதீன் ரஸ்வி. பாஜகவின் ஜால்ராவாக இஸ்லாமியர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் சஹாபுதீன் ரஸ்வி செயல்பட்டு வருபவர்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து முனிருத்தீன் ஷெரீப், “அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டும் என பாஜகவிற்கு பிரசாரம் செய்த நபர் சஹாபுதீன் ரஸ்வி. இந்தியாவில் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி உடனும் அமைத்துவிடும் ஆழ்ந்து வருவதாக சான்றித அளித்த நபர் தான் இந்த சஹாபுதீன் ரஸ்வி. அதுமட்டுமின்றி, இஸ்லாமியர்களுக்கு எதிராக மக்கள் விரோத பாஜக அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை ஆதரித்த இஸ்லாமிய துரோகி தான் சஹாபுதீன் ரஸ்வி.

இதையும் படிங்க : வக்ஃப் சட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதில்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

தற்போது வக்ஃப் திருத்த மசோதாவை கொண்டு வந்து இஸ்லாமிய சொத்துக்களை அபகரிக்க துடிக்கும் பாஜகவிற்கு துணை போகும் இந்த துரோகி சஹாபுதீன் ரஸ்வி” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத் தேசிய தலைவர் என கூறி கொள்ளும் சஹாபுதீன் ரஸ்வி இந்தியாவில் எந்த மாநில மசூதி ஜமாஅத் உறுப்பினராக இல்லை. சஹாபுதீன் ரஸ்வி என்ற தனி நபர் அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத் என்ற பெயரை தவறாக பயன்படுத்தி பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுபவர்.

இப்படிப்பட்ட நபர் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் குடிகார இஸ்லாமியர்கள் கலந்து கொண்டதாக சஹாபுதீன் ரஸ்வி கூறியுள்ளார். தமிழக இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியுள்ள சஹாபுதீன் ரஸ்வி பேசியிருப்பதை இந்திய தேசிய லீக் வன்மையாக கண்டிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “தனது சுயநலத்திற்காகவும், சிலரின் தூண்டுதலின் பெயரால் சஹாபுதீன் ரஸ்வி தமிழக இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் சார்பில் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இஸ்லாமியர்கள் நெஞ்சில் பால் வார்த்த தீர்ப்பு: நடிகர் விஜய் அறிக்கை.. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com