ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் வெளிமாநில உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் வெளிமாநில உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
Published on: August 26, 2024 at 6:09 pm
ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: திருநெல்வேலி (கிழக்கு) மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் உயிரிழந்தது, 4 மாதங்கள் கடந்தும் இன்னமும் துப்பு துலங்கவில்லை.
இந்த பரபரப்பான வழக்கு, தொடக்கத்தில் நெல்லை தனிப்படை போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் இந்த வழக்கில், வெளிமாநிலத்தில் உள்ள உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கில் முதல் கட்டமாக 150 பேருக்கு மேல் சம்மன் அனுப்பி, சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணையை தீவிரமாக்கினர். எனினும் இந்த வழக்கில் இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. 4 மாதங்கள் கடந்தும் மர்மம் நீடிக்கிறது.
இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் வெளிமாநில உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களின் வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதுவரை 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com