Malayali widow in Manali: வீட்டில் தொழுகை நடத்துவதற்குப் பதிலாக பயணம் செய்த விதவையை கேரள முஸ்லிம் மதகுரு கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Malayali widow in Manali: வீட்டில் தொழுகை நடத்துவதற்குப் பதிலாக பயணம் செய்த விதவையை கேரள முஸ்லிம் மதகுரு கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: February 22, 2025 at 7:15 pm
கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர், 55 வயது முஸ்லிம் விதவை ஒருவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றதை விமர்சித்து பேசியது சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்ராஹிம் சகாஃபி புழக்கத்திரியின் உரையின் போது அவர் கூறிய கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை கொண்டுவந்துள்ளன. பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.
கோழிக்கோட்டைச் சேர்ந்த நஃபீசும்மா, தனது மகள்களுடன் மணாலிக்கு சுற்றுலா சென்றிருந்தார். இது தொடர்பான வீடியோவில், அவர் விளையாட்டுத்தனமாக பனியை வீசி, வாழ்க்கையில் இதுபோன்ற தருணங்களை அனுபவிக்க மற்றவர்களை ஊக்குவிப்பார். பயணம் மதகுருவுக்குப் பிடிக்கவில்லை, அவர் அவரது செயல்களை ஏற்கவில்லை. மாறாக விமர்சித்து இருப்பார்.
ஹோட்டல் மொட்டை மாடியில் பயங்கரம்.. பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!
இந்த நிலையில், மதகுரு சகாபி தனது உரை, ஒரு வயதான பெண்ணின் வீடியோவை நீங்கள் பார்த்திருக்கலாம். அவரது கணவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒரு மூலையில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக, அவர் வேறொரு மாநிலத்திற்குச் சென்று பனியில் விளையாடுகிறார். இதுதான் வாழ்க்கை என்று அவள் அனைவரையும் அழைக்கிறாள். இது வாழக்கை அல்ல. பிரச்னை என்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் விவாதத்தை தூண்டியுள்ளது.
இதையும் படிங்க
தேசிய கல்விக் கொள்கை.. அரசியல் பார்வை கூடாது.. மு.க ஸ்டாலினுக்கு பிரதான் கடிதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com