US Iran War: ஈரான் மீதான தான இஸ்ரேல் தாக்குதலில் பலியான 150 பள்ளி மாணவிகளுக்கு இன்று இறுதி ஊர்வலம் நடந்தது.
US Iran War: ஈரான் மீதான தான இஸ்ரேல் தாக்குதலில் பலியான 150 பள்ளி மாணவிகளுக்கு இன்று இறுதி ஊர்வலம் நடந்தது.

Published on: March 3, 2026 at 3:49 pm
மினாப், மார்ச் 3 2026: இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து ஈரான் மீது கூட்டாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கடுமையாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தெற்கு ஈரானின் ஹார்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 150 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பலியாகி உள்ளனர். இதனை அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் தொடர் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்த 150 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கான இறுதி ஊர்வலம் இன்று நடந்தது. பல்வேறு தெருக்களில் இருந்து ஆண்கள் பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இஸ்ரேல் பிரதமர் மாளிகையை குறி வைத்த ஈரான்.. பெஞ்சமின் நேதன்யாகு என்ன ஆனார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com