Singapore President Tharman Shanmugaratnam | சிங்கப்பூர் அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின் முக்கியத்தும் குறித்து பார்க்கலாம்.
Singapore President Tharman Shanmugaratnam | சிங்கப்பூர் அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின் முக்கியத்தும் குறித்து பார்க்கலாம்.
Published on: January 11, 2025 at 5:42 pm
Updated on: January 11, 2025 at 11:26 pm
சிங்கப்பூர் அதிபர் இந்தியா பயணம்: சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஜனவரி 14 முதல் 18 வரை இந்தியாவிற்கு தனது முதல் அரசு முறைப் பயணமாக வருகிறார். இந்தியா-சிங்கப்பூர் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தப் பயணம் அமைய உள்ளது.
இந்த நிலையில், இந்தப் பயணத்தின் போது, இந்தியாவும் சிங்கப்பூரும் எரிசக்தி, தொழில்துறை பூங்காக்கள் மற்றும் திறன்கள் உள்ளிட்ட பாரம்பரியமற்ற ஒத்துழைப்புத் துறைகளில் கவனம் செலுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும், சிங்கப்பூர் அதிபர் தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு ஒடிசாவில் உள்ள கோனார்க் கோவிலுக்கு செல்கிறார். இதற்கிடையில் சிங்கப்பூர் அதிபர் தனது பயணத்தின் போது இரு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சண்முகரத்னம் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிரதமர் மோடி நாட்டிற்கு விஜயம் செய்தபோது இந்தியா மற்றும் சிங்கப்பூர் உறவுகள் விரிவான வளர்ச்சியை கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com