ஜனநாயகம் எங்களின் டி.என்.ஏ.வில் கலந்தது என பிரதமர் நரேந்திர மோடி கயானா நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனநாயகம் எங்களின் டி.என்.ஏ.வில் கலந்தது என பிரதமர் நரேந்திர மோடி கயானா நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
Published on: November 21, 2024 at 10:29 pm
Updated on: November 21, 2024 at 11:19 pm
PM Modi Guyana Speech | பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (நவம்பர் 21) கயானா நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை பாராட்டி, தனக்கு மிக உயர்ந்த கவுரவத்தை வழங்கிய கயானாவுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி, “”இந்த கவுரவத்திற்காக உங்கள் அனைவருக்கும், கயானாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்குள்ள அனைத்து குடிமக்களுக்கும் மிக்க நன்றி. இந்த கௌரவத்தை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, “இது உலகத்திற்கு மோதுவதற்கான நேரமல்ல; மோதலை உருவாக்கும் நிலைமைகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நேரம் இது. இன்று பயங்கரவாதம், போதைப்பொருள், சைபர் கிரைம் என எத்தனையோ சவால்கள் உள்ளன.
அவற்றை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே நமது வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும்” என்றார். இதையடுத்து, “முதலில் ஜனநாயகம், முதலில் மனிதநேயம் என்ற உணர்வைப் பின்பற்றி, இன்று இந்தியா, விஸ்வ பந்துவாக உலகிற்கு தனது கடமைகளை நிறைவேற்றி வருகிறது. ஜனநாயகம் என்பது எங்களின் டி.என்.ஏ.வில் கலந்தது” என்றார்.
இதையும் படிங்க வா நண்பனே.. நண்பனே.. இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com