Nepal: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக இன்றிரவு (செப்.12, 2025) சுஷிலா கார்க்கி பொறுப்பேற்கிறார்.
Nepal: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக இன்றிரவு (செப்.12, 2025) சுஷிலா கார்க்கி பொறுப்பேற்கிறார்.

Published on: September 12, 2025 at 9:22 pm
காத்மாண்டு, செப்.12 2025: நேபாள நாட்டில் இளந்தலைமுறையினர் நடத்திய போராட்டத்தினால், பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை நாட்டின் இடைக்கால பிரதமராகப் பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இவர், இன்றிரவு சுமார் 8.45 மணிக்கு மேல் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த சுஷிலா கார்க்கி
நேபாளத்தின் முதல் மற்றும் ஒரே பெண் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான சுஷிலா கார்க்கி, ஜூன் 7, 1952 அன்று பிரத்நகரில் பிறந்தவர் ஆவார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான கார்க்கி, 1972 இல் மகேந்திர மொராங் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பிஏ) பட்டம் பெற்றார், பின்னர் 1975 இல் வாரணாசியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இந்நிலையில், கார்க்கி ஏப்ரல் 13 முதல் ஜூலை 10, 2016 வரை தற்காலிக தலைமை நீதிபதியாகவும், பின்னர் ஜூலை 11, 2016 முதல் ஜூன் 7, 2017 வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
அவரது பதவிக் காலத்தில், இடைக்கால நீதி மற்றும் தேர்தல் தகராறுகள் தொடர்பான முக்கிய வழக்குகளுக்கு அவர் தலைமை தாங்கினார், ஜனநாயகத்தின் பாதுகாவலராக நீதித்துறையின் பங்கை வலுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ட்ரம்ப் ஆதரவாளர் சுட்டுக்கொலை.. துப்பாக்கி பறிமுதல்.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com