அபுதாபி ட்ரோன் தாக்குதல்.. இந்தியர் உள்பட 2 பேர் மரணம்!

Iran Israel war: அபுதாபியில் ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழந்தார். இது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: March 26, 2026 at 8:14 pm

துபாய், மார்ச் 26, 2026: அபுதாபியில் ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழந்தார். இதற்கிடையில், ஹோர்முஸ் கடல்சந்தியை முடக்கிய ஈரான் கடற்படை தளபதியை இஸ்ரேல் சுட்டுக் கொன்றது.

இந்தியர் உயிரிழப்பு

அபுதாபி அதிகாரிகள் தெரிவித்ததாவது, வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையைத் தடுத்து வீழ்த்தியபோது, அதன் சிதைவுகள் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் இந்தியர் ஆவார். மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குவைத் ட்ரோன் தாக்குதல்

இதற்கிடையில், குவைத் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா அலி அப்துல்லா அல்-சாலிம் அல்-சபாஹ் வியாழக்கிழமை, ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு குவைத் சர்வதேச விமான நிலையத்தை ஆய்வு செய்தார். அந்தத் தாக்குதல் விமான எரிபொருள் தொட்டிகளை குறிவைத்ததாக கூறப்படுகிறது.

ஈரான் தளபதி மரணம்

இதற்கிடையில், ஹோர்முஸ் கடல்சந்தியை முடக்கிய ஈரான் கடற்படை தளபதியை இஸ்ரேல் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : டேஜியான் தொழிற்சாலை தீ விபத்து.. 10 பேர் மரணம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com