காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் ; 33 பாலஸ்தீனியர்கள் பலி

Israeli airstrike on Gaza | வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியா முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

Published on: October 19, 2024 at 3:14 pm

Israeli airstrike on Gaza | வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியா முகாம் மீது நேற்று மாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 21 பெண்களும் அடங்குவர்.

மேலும் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை 50-ஐ எட்டக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலில் 85க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தெற்கு இஸ்ரேலிய எல்லையில் 2023 அக்டோபர் 7ல் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக மிகப்பெரிய அளவிலான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இதுவரை, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 42,500 ஆக உயர்ந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ; 12 பேர் பலி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com