100 கோடி சந்தாதாரர்கள்.. இந்தியாவில் பிராட்பேண்ட் புதிய சாதனை!

Broadband: இந்தியாவில் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 100 கோடி மைல்கல்லை கடந்துள்ளது.

Published on: January 1, 2026 at 12:10 pm

புதுடெல்லி, ஜன.1, 2026: இந்தியாவில் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 100 கோடி மைல்கல்லை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2025 நவம்பர் மாத நிலவரப்படி, 100.37 கோடி பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் உள்ளனர். இது, 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 13.15 கோடி ஆக காணப்பட்டது. இந்நிலையில், 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 100.37 கோடியாக உயர்ந்துள்ளது.

இது குறித்து, தகவல் தொடர்பு அமைச்சகம் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஆறு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை, இணைய அணுகல் விரிவாக்கம், மற்றும் மக்கள் தொழில்நுட்ப பயன்பாட்டின் வேகமான முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2026 புத்தாண்டு செழிப்பு, வளர்ச்சி, வெற்றியை கொடுக்கட்டும்.. பிரதமர் நரேந்திர மோடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com