Vaiko: திராவிட மாடல் தமிழ்நாட்டின் பொற்காலம் என தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
Vaiko: திராவிட மாடல் தமிழ்நாட்டின் பொற்காலம் என தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

Published on: January 2, 2026 at 5:34 pm
சென்னை ஜனவரி 2, 2025; திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டின் பொற்காலம் என தெரிவித்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, ” திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம்” எனவும் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடை பயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார்.
திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே தொடங்கியுள்ள இந்த சமத்துவ நடை பயணம் மதுரையில் ஜனவரி 12ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நடை பயணத்தின் போது தேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ” தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி பொற்காலம்” என வர்ணித்தார்; தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் பெற இந்த ஆட்சி தொடர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்னதாக மதுவுக்கு எதிராக பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சமத்துவ நடை பயணத்தை தொடங்கியுள்ளார் என்பது நினைவு கூறத்தக்கது.
இதையும் படிங்க; கனிமொழி தலைமை, கே என் நேரு முன்னிலை.. தஞ்சாவூரில் திமுக மகளிர் மாநாடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com