ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இல்லையா? டி.டி.வி தினகரன் கேள்வி

TTV Dhinakaran | கார் பந்தயத்திற்கும், விளம்பரத்திற்கும் நிதி ஒதுக்கிவிட்டு, நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பது தான் திராவிட மாடலா ? என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: September 7, 2024 at 11:55 am

Updated on: September 7, 2024 at 11:57 am

TTV Dhinakaran | மகளிர் பண்டக சாலைகளின் கீழ் சென்னையில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இரண்டு மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் மகளிர் பண்டக சாலையின் கீழ் இயங்கும் நியாய விலைக்கடை ஊழியர்கள் – கார் பந்தயத்திற்கும், விளம்பரத்திற்கும் நிதி ஒதுக்கிவிட்டு, நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பது தான் திராவிட மாடலா ? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.

இரண்டு மாத ஊதியம் நிலுவை

சென்னை பட்டினம்பாக்கம், அபிராமபுரம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட 7 மகளிர் பண்டக சாலைகளின் கீழ் இயங்கி வரும் 59 நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடும் கண்டனம்

மகளிர் பண்டக சாலைகளின் கீழ் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தை முறையாக ஒதுக்காமல், அங்கிருக்கும் பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஊதியத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கும் கூட்டுறவுத்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

மக்களின் வரிப்பணத்தில் கார் பந்தயம்

மக்களின் வரிப்பணத்தில் தனியார் கார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை நடத்துவதற்கும், விளம்பரம் செய்வதற்கும் பல கோடி ரூபாயை ஒதுக்கி செலவு செய்யும் திமுக அரசிடம், நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இல்லையா? என பொதுமக்களே கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

ஊதியத்தை வழங்குக

எனவே, மகளிர் பண்டக சாலைகளின் கீழ் சென்னையில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்குவதோடு, இனி வரும் காலங்களில் மாதந்தோறும் தடையின்றி ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சோழர் கால கிருஷ்ணர் சிலை மீட்பு: மதிப்பு என்ன தெரியுமா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com