கவனம் ஈர்க்கும் திருநங்கை வேட்பாளர்.. யார் இந்த நாம் தமிழர் ரோஷினி?

NTK’s Roshini in Villivakkam : வில்லிவாக்கத்தை மாதிரி தொகுதியாக மாற்ற விரும்பும் ஒரே திருநங்கை வேட்பாளர் ரோஷினி ஆவார்.

Published on: April 9, 2026 at 6:51 pm

சென்னை, ஏப்.9, 2026: சென்னை வில்லிவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ரோஷினி, பெண்கள் அதிகாரமளிப்பு மற்றும் உள்ளூர் வளர்ச்சியை தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளாக முன்வைக்கிறார்.

புதுமையான பிரசார முறைகள் மூலம் மக்கள் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த வகையில், வில்லிவாக்கத்தை மாதிரி தொகுதியாக மாற்ற விரும்பும் ஒரே திருநங்கை வேட்பாளர் ரோஷினி ஆவார்.

முப்பது வயதான எஸ். ரோஷினி, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். பொதுவாழ்க்கைக்கு அவர் புதிதல்ல; ஏனெனில் அவரது அறக்கட்டளை, மாணவர்களுக்கு கல்வி உதவி, ஏழைகளுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்குவதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. “மற்றவர்களுக்கு உதவுவது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. பள்ளிக் காலத்திலேயே நான் இளைய மாணவர்களுக்கு தனிப்பாடம் எடுத்துக் கொடுத்தேன்,” என அவர் நினைவுகூர்கிறார்.

ஆனால் தேர்தல் அரசியலில் நுழைவது ரோஷினியின் எண்ணத்தில் இருந்ததல்ல. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரே திருநங்கை வேட்பாளராக இருப்பேன் என்றும் அவர் நினைத்ததில்லை.
அவரது சமூகப்பணியை கவனித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேட்பாளராக நிற்கத் தயாரா என்று கேட்டுள்ளார்.

இது குறித்து பேசிய ரோஷினி, “கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக NTK அரசியலை நெருக்கமாகக் கவனித்து வருகிறேன்,” என அவர் கூறி, தனது சிந்தனைகள் கட்சியின் கொள்கைகளுடன் ஒத்துப்போவதால் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன் என்றார்.

மேலும், பெரிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது நாம் தமிழர் கட்சிக்கு குறைந்த வளங்கள் உள்ளதால், ரோஷினி, கட்சியின் சின்னமான விவசாயி மற்றும் உழவு கருவிகளை ஏற்றி காளை வண்டியில் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும், “விண்ணைத் தொடும் வில்லிவாக்கம்” என்ற கவர்ச்சியான கோஷத்தை உருவாக்கி, கட்சியின் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு செல்கிறார். அவரது பிரசாரம் ஏற்கனவே தொகுதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தொகுதி மக்களே கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கோவை வந்த போதிலும் பரப்புரை மேற்கொள்ளாத ராகுல்.. சிக்கலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com