Tamil Nadu fishermen arrested: தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
Tamil Nadu fishermen arrested: தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Published on: November 3, 2025 at 8:21 pm
சென்னை, நவ.3, 2025: தமிழ்நாடு மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் இன்று (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச கடல் பகுதியில் எல்லை பகுதியை தாண்டி மீன்பிடித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 35 பேரும், கான்கேசன்துரை கப்பல் படை கேம்பில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மீனவர்கள் 3 இயந்திர படகுகளில் மீன்பிடித்துள்ளனர். இந்த நிலையில், அந்த இயந்திர மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு, காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்தாக கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் அதிகாரி முன்னிலையில் பாமக நிர்வாகியின் கழுத்தை அறுத்த ரவுடிகள்: இது தான் சட்டம் – ஒழுங்கை காக்கும் லட்சனமா? அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com