Sea Turtle Conservation Centre: சென்னை கடற்கரையில் கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
Sea Turtle Conservation Centre: சென்னை கடற்கரையில் கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

Published on: February 7, 2026 at 3:55 pm
சென்னை, பிப்.7, 2026: தமிழ்நாட்டின் கடற்கரை, இந்தியாவில் கடல் ஆமைகளின் முக்கிய வளர்ப்பு மற்றும் முட்டையிடும் இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக, அழிவின் விழிம்பு நிலையில் உள்ள ஒலிவ் ரிட்லி (Olive Ridley) கடல் ஆமை இனத்திற்கான முக்கிய வாழிடமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், சென்னை கடற்கரையில் கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய பாதுகாப்பு மையம், இந்த இனத்தையும் மற்ற கடல் ஆமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.
மேலும், இது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த கடல் ஆமை பாதுகாப்பு மையம், உலக வங்கியின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு நிலையான கடல் வளங்கள் மற்றும் நீல பொருளாதாரம் (TN-SHORE) திட்டத்தின் கீழ், ரூ.14.50 கோடியில் சிறந்து விளங்கும் மையமாக இது நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இது ஆராய்ச்சி, செயற்கைக்கோள் டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் மையப்படுத்தப்பட்ட தரவு மேலாண்மைக்கான சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். இந்த மையம் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு மையமாகவும் செயல்படும், பொதுக் கல்வி மற்றும் வெளிநடவடிக்கையை ஆதரிக்கும். கடல் ஆமைகள் மிகக் குறைந்த உயிர்வாழ்வு விகிதங்களை எதிர்கொள்கின்றன, ஆயிரத்தில் ஒன்று அல்லது இரண்டு குஞ்சுகள் மட்டுமே முதிர்ச்சியடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை.. தொல். திருமாவளவன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com