Sanitation workers on Arrest: ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.
Sanitation workers on Arrest: ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.

Published on: December 27, 2025 at 3:01 pm
சென்னை டிசம்பர் 27 2028; சென்னையில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தங்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றனர். இந்தப் பேரணிக்கு போலீசார் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் பணி நிரந்தரம் மற்றும் உரிய ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.
தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தின் போது தமிழக அரசு, தூய்மை பணியில் தனியார்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
சென்னையில் உரிய ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கோரி பேரணி சென்ற தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசு இதில் உரிய கவனம் செலுத்தி தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க; மார்கழி மக்கள் இசை மாற்று அரசியல் மேடை.. கனிமொழி பரபரப்பு பேச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com