மதுரை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. தேதி, இடம் முழு விவரம்!

PM Narendra Modi visit to Madurai: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்; பிப்ரவரி 28ஆம் தேதி அவர் மதுரையில்ஜதேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Published on: February 5, 2026 at 4:25 pm

சென்னை பிப்ரவரி 5, 2026; பிரதமர் நரேந்திர மோடி, 2026 பிப்ரவரி 28ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி, பங்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறத்தமட்டில், சட்டமன்ற பொது தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக சென்னை அருகே மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி திமுக அரசின் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விமர்சித்திருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக முக ஸ்டாலினும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி 28ஆம் தேதி வருகை தர உள்ளார்.

இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரலாம் என தெரிவித்திருந்தார்.
எனினும் இதுவரை தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு முன்னர் இவர்கள் கூட்டணி தொடர்பாக தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தமட்டில் பல்வேறு கோரிக்கைகள் வைப்பதாகவும் இதனால் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணி பேசுவதில் வேகம் காட்ட வில்லை எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாட்டாளி மக்கள் கட்சியை பொருத்தமட்டில் அது தற்போது உள்கட்சி பிரச்சனை காரணமாக அன்புமணி ராமதாஸ் ஊரணியாகவும் ராமதாஸ் மற்றொரு அணியாகவும் திகழ்கின்றனர். இந்த கட்சியை பொருத்தமட்டில் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்து விட்டார். இதனால் ராமதாஸ் வேறு கூட்டணியை நாடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. எனினும் இது அதிகாரப்பூர்வ தகவல் அல்ல.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் தங்களது கூட்டணி தொடர்பை விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மாநிலத்தைப் பொறுத்தமட்டில் இழந்த ஆட்சியை மீட்க அதிமுகவும், ஆட்சியை தக்க வைக்க திமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதையும் படிங்க; கமல்ஹாசன் முதல் உரை.. வெடித்தது சர்ச்சை.. என்ன பேசினார் கமல்- நிர்மலா சீதாராமன்?

இடைக்கால பட்ஜெட்டுக்கு தயாராகும் தமிழ்நாடு.. மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்! M K Stalin

இடைக்கால பட்ஜெட்டுக்கு தயாராகும் தமிழ்நாடு.. மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்!

M K Stalin: சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது….

என் மகன் நிரபராதி.. யார் அந்த பெரிய இடம்? கோயில் காவலாளி அஜித் குமாரின் தாயார் கண்ணீர்! Ajith Kumars Lock Up Death Case

என் மகன் நிரபராதி.. யார் அந்த பெரிய இடம்? கோயில் காவலாளி அஜித் குமாரின் தாயார் கண்ணீர்!

Ajith Kumars Lock Up Death Case: “என் மகன் நிரபராதி; நீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்றுமே இல்லாத புகாரில் எனது மகன் அடித்து கொலை…

கமல்ஹாசன் உரையை லட்சோப லட்ச மக்கள் புகழ்கிறார்கள்.. கவிஞர் சிநேகன்! Kamal Haasan

கமல்ஹாசன் உரையை லட்சோப லட்ச மக்கள் புகழ்கிறார்கள்.. கவிஞர் சிநேகன்!

Kamal Haasan: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் முதல் பாராளுமன்ற உரையை லட்சோப லட்சம் மக்கள் புகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த…

தமிழ்நாட்டில் வலிமையான காங்கிரஸ்.. 18 எம்எல்ஏ, 9 எம்பிக்கள்.. பட்டியலிட்ட செல்வப்பருந்தகை! K Selvaperunthagai

தமிழ்நாட்டில் வலிமையான காங்கிரஸ்.. 18 எம்எல்ஏ, 9 எம்பிக்கள்.. பட்டியலிட்ட செல்வப்பருந்தகை!

K Selvaperunthagai: தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் வலிமையான கட்சியாக திகழ்கிறது என்று கூறிய செல்வப் பெருந்தகை காங்கிரஸ் வசம் 9 எம்பிக்கள் மற்றும் 18 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்…

பயங்கரவாதி சுட்டுக்கொலை.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! Terrorist Killed in Encounter

பயங்கரவாதி சுட்டுக்கொலை.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!

Terrorist Killed in Encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், பாதுகாப்பு படையினர் ஆபரேஷனை தொடர்ந்துவருகின்றனர். அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் எனக்…

ஆசிய துப்பாக்கிச் சுடுதல்.. தங்கம் வென்ற ஈஷா சிங் Asian Rifle and Pistol Championship

ஆசிய துப்பாக்கிச் சுடுதல்.. தங்கம் வென்ற ஈஷா சிங்

Asian Rifle and Pistol Championship: ஆசிய ரைஃபிள் மற்றும் பிஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஈஷா சிங் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com