MK Stalin: ஒரு நெல் மணி கூட வீணாகக் கூடாது என அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்;டாலின் தெரிவித்துள்ளார்.
MK Stalin: ஒரு நெல் மணி கூட வீணாகக் கூடாது என அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்;டாலின் தெரிவித்துள்ளார்.

Published on: October 29, 2025 at 2:27 pm
சென்னை, அக்.29, 2025: தமிழ்நாட்டில் நெல் குடோன்களில் போதிய வசதிகள் இல்லை. இதனால் நெல் மணிகள் வீணாகின்றன என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. குறிப்பாக இந்த விவகாரத்தில் அ.தி.மு.க மற்றும் த.வெ.க நேற்று தி.மு.க. அரசு மீது குற்றஞ்சாட்டியிருந்தது. குறிப்பாக த.வெ.க தலைவர் நடிகர் விஜய், தி.மு.க அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றன எனத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
அதில், ‘கடந்த 4 ஆண்டுகளில் முந்தைய ஆட்சியை விட அதிக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், வேளான் உற்பத்தியும், பாசனம் பெறும் பரப்புகளும் அதிகமாகியுள்ளன. அதேபோல் கொள்முதலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் கிடங்குகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடிக்கு என்ன வரலாறு?
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ள மு.க ஸ்டாலின், அவருக்கு என்ன தகுதி இருக்கிறது எனக் கேட்டுள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின், ‘பொய் மற்றும் துரோகத்தை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு எந்த வரலாறும் கிடையாது. இந்த இரண்டையும் தவிர எடப்பாடி பழனிசாமியிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : திமுகவுக்கு தாளம் போடுபவர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com