E-pass for Ooty and Kodaikanal: ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
E-pass for Ooty and Kodaikanal: ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Published on: March 13, 2025 at 6:30 pm
சென்னை மார்ச் 13, 2025: ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் ஆய்வுகள் செய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் ஊட்டி கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள உத்தரவில், ” ஊட்டிக்கு வார நாட்களில் 6000 சுற்றுலா வாகனங்களும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கும் மட்டும் அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல் கொடைக்கானலுக்கு வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களுக்கும் வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் அரசு பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி உள்ளூர் மற்றும் விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல்..
இந்த நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இதனை அமல்படுத்தி ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில் இந்த கட்டுப்பாடுகள் 2025 ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை
அதே நேரம் இந்த உத்தரவில் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க; திருச்சி ரயில் பயணிகளுக்கு தித்திப்பான செய்தி.. தாம்பரத்திற்கு ஸ்பெஷல் ட்ரெயின்.. தென்னக ரயில்வே!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com