லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பெண்களுக்கு ‘மனைவி’ அந்தஸ்து.. மதுரை ஐகோர்ட் பெஞ்ச்!

Live-in Relationship : சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு,‘லிவ்-இன்’ உறவுகளில் இருக்கும் பெண்களுக்கு ‘மனைவி’ என்ற சட்ட அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம், திருமண வாக்குறுதி அளித்து பின்னர் விலகும் ஆண்களின் தவறான பயன்பாட்டிலிருந்து பெண்கள் பாதுகாப்பு பெறுவார்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published on: January 21, 2026 at 1:37 pm

மதுரை, ஜன.21, 2026: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண்களுக்கு மனைவி என்ற அந்தஸ்து வழங்க வேண்டும் என தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

வழக்கு என்ன?

திருச்சி மாவட்டம் மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், தன்னை திருமணம் செய்வேன் என்று வாக்குறுதி அளித்து ஆண் ஒருவர் ஏமாற்றிவிட்டார் எனக் கூறிஇருந்தார்.
இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட நபர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பாரதிய ந்யாய சன்ஹிதா (BNS) பிரிவு 69-ஐ நீதிமன்றம் குறிப்பிட்டு நிராகரித்தது.

மேலும், நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து, பெண்களுக்கு ‘மனைவி’ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்தத் தீர்ப்பை நீதிபதி எஸ். ஸ்ரீமதி தலைமையிலான மதுரை அமர்வு வழங்கியுள்ளது.

தீர்ப்பின் தாக்கம்

  • பெண்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.
  • சமூக அவமதிப்பு குறையும், பெண்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்த முடியும்.
  • திருமண வாக்குறுதி அளித்து விலகும் ஆண்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எளிதாகும்.
  • பெண்களை ஆண்கள் தவறாக வழிநடத்துவதும் குறையும்.

மேலும், இந்தியாவில் லைவ்-இன் உறவுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்ப்பு பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
தொடர்ந்து, இது திருமணமில்லாத உறவுகளுக்கும் சட்ட அந்தஸ்து வழங்கும் வழியைத் திறக்கிறது. சமூக மற்றும் சட்ட ரீதியான சமநிலை ஏற்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தி.மு.க கூட்டணி முறிவு இல்லை.. ராகுல் குறிப்பிட்ட 2 விஷயம்.. முழு விவரம்!

ரஜினிகாந்த் பாடல்களை சென்னை சூப்பர் கிங்ஸ் பயன்படுத்தக் கூடாது.. நீதிமன்றத்தில் சன் டிவி வழக்கு!
Sun TV Petition

ரஜினிகாந்த் பாடல்களை சென்னை சூப்பர் கிங்ஸ் பயன்படுத்தக் கூடாது.. நீதிமன்றத்தில் சன் டிவி

திமுக ஆட்சியில் கொலைகள் குறைவா?..தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!.. அன்புமணி குற்றச்சாட்டு
Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் கொலைகள் குறைவா?..தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!.. அன்புமணி குற்றச்சாட்டு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com