கிருஷ்ணகிரி; நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப் பகலில் செயின் பறிப்பு!

Krishnagiri Chain snatch : கிருஷ்ணகிரியில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப் பகலில் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: September 23, 2025 at 6:34 pm

கிருஷ்ணகிரி, செப்.23, 2025: கிருஷ்ணகிரி மாவட்டம் ஜக்கப்பன் நகரில், பள்ளிக்குச் சென்ற பேரக்குழந்தைகளை வழியனுப்பிவிட்டுத் திரும்பிய கலைச்செல்வி (48) என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் செயில் பறிப்பில் ஈடுபட்டார்.

இவரை சில மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வர சுதர்சன குமார் என்பது தெரியவந்தது.
இவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் செயின் பறிப்பில் 1.5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 1 பவுன் தங்க நகை சம்பவ இடத்தின் அருகிலேயே கீழே விழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப் பகலில் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த போலீசாருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : திருமண இணையத்தில் பழகி பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு.. இளைஞர் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com