தூத்துக்குடியில் ஹோலோசீன் கால புதைபடிவப் படுகை கண்டுபிடிப்பு

Holocene Fossil Bed Discovered : தூத்துக்குடியில் ஹோலோசீன் காலத்தைச் சேர்ந்த புதைபடிவப் படுகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Published on: April 27, 2026 at 7:19 pm

Updated on: April 27, 2026 at 7:20 pm

தூத்துக்குடி, ஏப். 27 2026: தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ஹோலோசீன் காலத்தைச் சேர்ந்த புதைபடிவப் படுகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தக் கண்டுபிடிப்பு நாட்டின் குவாட்டர்னரி புதைபடிவப் பதிவேட்டை குறிப்பிடத்தக்க அளவில் வளப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த யாதவ், இது இந்தியாவின் பண்டைய வனவிலங்குகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையை சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவும் என்று கூறினார்.

2023-ஆம் ஆண்டில் பெய்த கனமழையால் இந்தப் புதைபடிவத் தளங்கள் வெளிப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி நிர்வாகத்தின் கோரிக்கையின் பேரில், இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் (Zoological Survey of India) தள ஆய்வை மேற்கொண்டது.

இதையும் படிங்க : தி.மு.க தொண்டர் காதறுப்பு.. விழுப்புரத்தில் பரபரப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com