100 நாள்களில் ரூ.100 கோடி என வலை; தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் அதிகரிப்பு: மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss | தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து காணப்படுவதாக பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Published on: October 4, 2024 at 6:25 pm

Dr Ramadoss | பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “100 நாட்களில் 100 கோடி பரிசு என வலைவீசி மக்களை இழுக்கும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து வருகிறது.

தீபஒளி திருநாள், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் ஆகியவற்றையொட்டி அக்டோபர் 5-ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை 100 நாட்களுக்கு ரூ. 100 கோடி பரிசு வெல்லலாம் என்று ஆசை காட்டி ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்து வருகிறது. இதன் விளைவு என்னவாக இருக்குமோ? என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருந்து ஓர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது என்றால் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் பணம் எத்தனை ஆயிரம் கோடி சூதாட்டத்தின் மூலம் சுருட்டப்படும்; அதனால் தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் குடும்பங்கள் வீதிக்கு வரும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது. ஆனால், இதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு 11 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தாலும் கூட கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தமிழக அரசின் மேல்முறையீடு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இதை சுட்டிக்காட்டி ஆன்லைன் சூதாட்டத் தடை வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவோ, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவோ எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.

கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; லட்சக்கணக்கான குடும்பங்கள் சொத்துகளை இழந்து தவிக்கின்றன. இதே நிலை தொடருவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறதா?

இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

வயல்வெளியில் மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்.. இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை PMK Party founder Doctor Ramadoss

வயல்வெளியில் மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்.. இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss: வயல்வெளியில் மின்சாரம் தாக்கி விவசாயி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்….

பூம்புகாருக்கு குடும்பத்துடன் வாரீர்.. பா.ம.க. மகளிர் மாநாடு.. மருத்துவர் ராமதாஸ் அழைப்பு! PMK party womens conference

பூம்புகாருக்கு குடும்பத்துடன் வாரீர்.. பா.ம.க. மகளிர் மாநாடு.. மருத்துவர் ராமதாஸ் அழைப்பு!

PMK party womens conference: பாட்டாளி மக்கள் கட்சி மாநாடு ஆக.10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்….

தனியார் பள்ளிகளில் 25% ஏழை மக்கள் கல்வி பெறும் முறை பயன்பாட்டில் உள்ளதா? மருத்துவர் ராமதாஸ் கேள்வி Dr. Ramadoss

தனியார் பள்ளிகளில் 25% ஏழை மக்கள் கல்வி பெறும் முறை பயன்பாட்டில் உள்ளதா?

Dr Ramadoss: அரசு நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை எளிய மக்கள் கல்வி பெறும் முறை பயன்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக…

சாகித்திய விருதுகளை குவித்த தமிழர்கள்.. மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து! PMK party womens conference

சாகித்திய விருதுகளை குவித்த தமிழர்கள்.. மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து!

Dr Ramadoss: சாகித்திய விருதுகளை பெற்றுள்ள இரு தமிழர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்….

சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும்.. மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் PMK Party founder Doctor Ramadoss

சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும்.. மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Doctor Ramadoss: சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 என்பதை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com