ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: செல்வப் பெருந்தகையை நீக்கக் கோரி கடிதம்!

Armstrong Murder Case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Published on: September 19, 2024 at 10:35 pm

Armstrong Murder Case | பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய் சங்கர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப் பெருந்தகைக்கு தொடர்பு உள்ளது.

இந்த வழக்கில் செல்வப் பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை எனப் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இருந்து செல்வ பெருந்தகையை நீக்கினால்தான் காங்கிரஸின் மதிப்ப நிலைத்து இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை மாதம் 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ‘ஏன் நாளைக்கே கூட.. விரைவில் துணை முதல்வராகிறார் உதயநிதி’: அமைச்சர் தகவல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com