4 லட்சம் ஆசிரியர்களுக்கு திமுக துரோகம்.. மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss: நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு திமுக துரோகம் செய்துள்ளது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Published on: January 24, 2026 at 5:30 pm

சென்னை ஜனவரி 24, 2026; பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாது என்றும், அடுத்த ஆண்டு ஜூலை மற்றும் திசம்பர் மாதங்களில் தான் வழக்கமான ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என்று கூறி வந்த திமுக அரசு, இதன்மூலம் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல், அவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க; மாணவர்களின் நலன் கருதி.. கோரிக்கை வைத்த மருத்துவர் ராமதாஸ்!

மேலும், “திமுக ஆட்சியில் அனைத்து வகையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப் பட்டுள்ளது. இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் திமுக அரசின் துரோகத்திற்கு ஆளானவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அவர்களை ஒரு போதும் கைவிடாது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் புதிய அரசு அமையும் போது, எளிய பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் சிறப்புத் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தச் செய்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணியில் தொடர்வதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும் என்று உறுதியளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க; ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது.. பிரதமர் நரேந்திர மோடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com