திருப்பதிக்கு அமுல் நெய் வழங்கியதா? வெடித்த புதிய சர்ச்சை- விளக்கம்!

Tirumala laddu Row | திருப்பதிக்கு நெய் விநியோகிக்கவில்லை என அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Published on: September 21, 2024 at 3:01 pm

Tirumala laddu Row | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நடந்த ஆய்வில், நெய்யில் விலங்கின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது நாடு முழுக்க பெரும் சர்ச்சையான நிலையில், ஆந்திராவின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில், “திருப்பதிக்கு வழங்கப்பட்ட நெய் தரமானதாகதான் வழங்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. சந்திரபாபு நாயுடு தனது 100 நாள் ஆட்சியின் அதிருப்தியை மறைக்க இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார்” எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையில், திருப்பதிக்கு அமுல் நிறுவனத்திடம் இருந்தும் நெய் வாங்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் கருத்துக்கள் சூடாக பரிமாறப்பட்டன. இந்த நிலையில் திருப்பதிக்கு அமுல் நிறுவனம் நெய் வழங்கவில்லை. இது தவறான பரப்புரை” என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

திருப்பதியில் பிரச்னை ஏற்பட்ட நிலையில் கர்நாடகத்தில் அரசு நிறுவனமான நந்தினி நெய் மட்டுமே கோவில்களில் பயன்படுத்த வேண்டும்” என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமுல் தனது விளக்கத்தில், “அமுல் நெய் 50+ ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகவும் நம்பகமான நெய் பிராண்டாகும், மேலும் இது இந்திய குடும்பங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தொடர்கிறது.

அமுலுக்கு எதிரான இந்த தவறான பிரச்சாரத்தை நிறுத்தவே இந்தப் பதிவு வெளியிடப்படுகிறது. அமுல் நெய் தூய்மையான மாட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :  திருப்பதி லட்டில் கலப்படமா? திண்டுக்கல் வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com