சேலத்தில் அ.தி.மு.க பிரமுகர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

சேலத்தில் அ.தி.மு.க பிரமுகர் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Published on: August 29, 2024 at 3:51 pm

Updated on: August 29, 2024 at 4:00 pm

Salem AIADMK | சேலம் அட்டூரில் அதிமுக நிர்வாகி ரவி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அ.தி.மு.க நிர்வாகி ரவியின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரவி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அதிமுக நிர்வாகி இரவு நேரத்தில் வெளியே சென்றது ஏன்? அவருக்கு யாரேனும் எதிரிகள் உள்ளனரா? மரணத்துக்கு எனன காரணம்? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : கோவையில் பா.ஜ.க நிர்வாகி கொலை: 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com