போலி என்.சி.சி. முகாம்; பள்ளி மாணவிகளுக்கு தொல்லை: மதபோதகர் கைது!

Krishnagiri | பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Published on: September 11, 2024 at 10:26 pm

Krishnagiri | கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியொன்றில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சிவராமனின் நெருங்கிய நண்பரான டேனியல் அருள்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் உடற்பயிற்சி மாஸ்டராகவும், மத போதகராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த வழக்கில் தனியார் பள்ளியின் முதல்வர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சிவ ராமன் ஏற்கனவே தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த நிலையில் அவரின் நண்பரான மதபோதகர் டேனியல் அருள் ராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : விமானப் படையில் பெண் அதிகாரிக்கு தொல்லை: காவல் நிலையத்தில் புகார்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com