Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீருக்கு , ‘ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர்’ பயங்கரவாத அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீருக்கு , ‘ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர்’ பயங்கரவாத அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Published on: April 24, 2025 at 4:00 pm
புதுடெல்லி, ஏப்.24 2025: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
‘ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர்’ என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிடம் இருந்து இந்தக் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து, டெல்லி ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கௌதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட்டர் கௌதம் கம்பீருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காம் என்ற பகுதியில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இது நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் ஈடுபட்டனர் என்றும் இவர்களில் 3 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கங்குலி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com