Aditya Pratap Yadav: இந்தியாவின் ஆதித்ய பிரதாப் யாதவ் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
Aditya Pratap Yadav: இந்தியாவின் ஆதித்ய பிரதாப் யாதவ் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Published on: April 3, 2026 at 3:21 pm
உலான்பாட்டர், ஏப்.3, 2026: ஆதித்ய பிரதாப் யாதவ் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். இன்றைய ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், மங்கோலியாவின் உலான்பாட்டரில் இந்திய வீரர் ஆதித்ய பிரதாப் யாதவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
அவர், ஆண்கள் 65 கிலோ எடை பிரிவில் சவுதி அரேபியாவின் மூசா அல்ஹவ்சாவ் மீது 5-0 என்ற ஒருமித்த தீர்ப்பில் வெற்றி பெற்றார். இந்நிலையில், அடுத்த கட்டமான காலிறுதிப் போட்டியில், அவர் உஸ்பெகிஸ்தானின் அப்துல்லோ மதமினோவ் எதிராக மோத உள்ளார்.
இந்த வெற்றி, இந்திய குத்துச்சண்டை அணிக்கு ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், ஆதித்ய பிரதாப் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆல் ஏரியா நாங்க கில்லி.. கெத்து காட்டிய ஹைதராபாத்.. கொல்கத்தா கொர் கொர்…!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com