Palakkad | கேரளத்தில் இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Palakkad | கேரளத்தில் இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on: September 15, 2024 at 6:27 pm
Palakkad | கேரள மாநிலம் காஞ்சிகோடு மாவட்டம் பாலக்காடில் உள்ளூர் ஓணம் கொண்டாட்டத்தின்போது 50 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு அலமரம் பகுதியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது இட்லி சாப்பிடும் போட்டியில் சுரேஷ் என்பவர் கலந்து கொண்டார். நான்கு பேர் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் நான்கு இட்லிகளை எதுவும் தொட்டுக்கொள்ளாமல் தனியாக சாப்பிட வேண்டும்.
போட்டி தொடங்கும்போது மற்ற போட்டியாளர்கள் 1 இட்லியை எடுக்கும் நேரத்தில் சுரேஷ் 3 இட்லிகளை எடுத்து சாப்பிட முயன்றார்.சில நொடிகளில் அவர் சாப்பிட முடியாமல் விக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தார். அவரை உடனே மீட்டு அருகிலுள்ள கிளினிக்குப் பிறகு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
புதுச்சேரி கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பி.பி. ஜிரேஷ், “ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அலமரம் பகுதி மக்கள் பலவகையான விளையாட்டுகள் மற்றும் சிறிய போட்டிகளை நடத்தினார்கள். சுரேஷ் மிகவும் சுறுசுறுப்பானவர் என அறியப்பட்டவர். அவர் மறைந்தது மிகவும் வேதனையளிக்கிறது” என்றார்.
ஒரு லாரி டிரைவரான சுரேஷ், தனது தாய் கொல்லபுரா பாஞ்சாலியுடன் வசித்து வந்தார்.
இதையும் படிங்க : நாமக்கல்; கால்பந்து விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com