Tirupathi laddu Issue | திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
February 6, 2025
Tirupathi laddu Issue | திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
Published on: September 19, 2024 at 10:43 pm
Updated on: September 19, 2024 at 11:00 pm
Tirupathi laddu Issue | ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகன் ரெட்டி மீது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார். கடந்த காலங்களில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில், சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் எம் பி சுப்பா ரெட்டி, ” சந்திரபாபு நாயுடு தனது கருத்துக்கள் மூலமாக பல கோடி இந்துக்களை காயப்படுத்தி உள்ளார்; அரசியலுக்காக அவர் மோசமான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். இந்த விவாகரத்தில் நானும் எனது குடும்பமும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக இருக்கிறோம்.
குற்றச்சாட்டை முன்வைத்த சந்திரபாபு நாயுடு இதேபோல் சத்தியம் செய்வாரா? என கேள்வி எழுப்பு இருந்தார். இந்த நிலையில் கடந்த காலங்களில் உள்ள லட்டு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் லட்டில் சோயா பீன்ஸ் சூரியகாந்தி எண்ணெய் மீன் எண்ணெய் மற்றும் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பது உறுதியாகி உள்ளது. இது தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதையும் படிங்க : ‘ராகுல் நம்பர் 1 பயங்கரவாதி’: மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com