Telangana Road Accident: தெலங்கானா மாநிலத்தில் இன்று காலை நடந்த கோர விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Telangana Road Accident: தெலங்கானா மாநிலத்தில் இன்று காலை நடந்த கோர விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Published on: November 3, 2025 at 4:55 pm
ஹைதராபாத், நவ.3, 2025: தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லா அருகே மிர்ஜாகுடா-காணாபூர் சாலையில் இன்று காலை (நவ.3, 2025) ஏற்பட்ட சாலை விபத்தில் மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் விகாராபாத்-ஹைதராபாத் சாலையில் காலை 8 மணியளவில் நிகழ்ந்துள்ளது. ஒரு இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற போது ஒரு லாரி ஆர்.டி.சி பேருந்தில் மோதியதாக கூறப்படுகிறது.
விகாராபாத் மூத்த காவல் அதிகாரியின் தகவலின்படி, விபத்தில் மரணம் அடைந்த 19 பேரின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 20 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து தொடர்பான தகவல்களை பெற பொதுமக்களுக்கு உதவ ஹைதராபாத்தில் மாநில அரசு ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9912919545 மற்றும் 9440854433.
இந்த விபத்து குறித்து மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளை உடனடி மருத்துவ உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். சிறப்பு மருத்துவ குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 2 நாள் பயணம்.. கேரளா சென்றார் சி.பி ராதாகிருஷ்ணன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com