தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலை; 34 பேர் உயிரிழப்பு!

Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.

Published on: July 1, 2025 at 3:20 pm

ஹைதராபாத், ஜூலை 1 2025: தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி இண்டஸ்ட்ரீஸின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.

ஒரு நாள் முன்னதாக, திங்கட்கிழமை, பாஷமைலராம் தொழில்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஆலையில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்தது.
காலை 8:15 மணி முதல் காலை 9:35 மணி வரை உலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் ஆலையின் சில பகுதிகள் தரைமட்டமாகின.

மேலும், பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிர் பிழைத்தவர்களை மீட்பதற்கும் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டெடுப்பதற்கும் அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றினர்.
இந்த அவசர நடவடிக்கை இன்று வரை தொடர்ந்தது. இதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஹைதராபாத் இல்லத்தில் பிணமாக கிடந்த தொகுப்பாளினி; பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com